புதன், 5 டிசம்பர், 2012

தாஜ்மஹால் வருந்தியது

உன் மீது 
நான் வைத்துள்ள காதலை 
தாஜ்மஹாலிடம் வர்ணித்தேன். 
தாஜ்மஹால் வருந்தியது
ஷாஜஹான் தன்னை கட்டியதற்காக.......

செவ்வாய், 4 டிசம்பர், 2012

வானவில்


உன் அதரங்களை தீண்டும் காற்றுக்கும் 
வான்முகில்  கூட்டத்துக்கும் 
இடையே நடக்கும் 
மகரந்தச்சேர்க்கை............

திங்கள், 3 டிசம்பர், 2012

வீர மரணம்

தினமும் 
வீர மரணம் அடையும் 
வீரன் நான் 
உன் விழிகளின் படையெடுப்பால்.......

வியாழன், 29 நவம்பர், 2012

ஒப்பற்ற பேரழகி

என் தேவதையே!

உன் கார்குழலை
கார்முகிலோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு கருமை இல்லை!

உன் கருவிழியை
கயல்விழியோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு விழி ஈர்ப்பு இல்லை!

உன் சிரிப்பை
மலர்களோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு புன்னகை இல்லை!

உன் செல்லக்குரலை
குயிலின் பாட்டோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு இனிமை  இல்லை!

உன் மழலை பேச்சை
கிளியின் பேச்சோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு சிணுங்கல் இல்லை!

உன் முகத்தை
வான்மதியோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அதற்கு ஒளி இல்லை!

உன் கிறுக்கல்களை
வைரமுத்து வரிகளோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு உயிர் இல்லை!

உன் நடையை
தோகைமயிலோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு நளினம் இல்லை!

உன் பாதச் சுவடுகளை
மோனலிசா ஓவியத்தோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அது அழகு இல்லை!

உன்னை ஒப்பிட முடியாமல்
என் தோல்வியை ஒப்புக்கொண்டு
நீ ஒப்பற்ற பேரழகி என்று
ஒத்துக் கொண்டேன்............

திருடிய கவிதை

என் இதயம் என்னும் ஏட்டில்
தோன்றிய கவிதைகள் எல்லாம்
உன் நினைவுகள் என்னும்
புத்தகத்தில் இருந்து
திருடப்பட்டவை...............

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

உதட்டு சாயம் - முத்தம் - வானவில்

உன் வீட்டு ஜன்னலில் இருந்து
நீ எனக்கு காற்றில் அனுப்பிய
முத்தங்களை எல்லாம்
தவறாமல் சேர்த்து வந்தேன்....
தவறிய முத்தங்கள் எல்லாம்
வானத்தை அடைந்து
மாறியது வானவில்லாக.................

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

காதலிக்க முடியாது

உன் கார்குழல்
உன் கயல்விழிகள்
உன் மலரிதழ்கள்
உன் மழலைச் சிணுங்கல்கள்
உன் செல்லக் கோபங்கள்
உன் கொலுசின் ஒலிகள்
இவைகளைப் போல்
வேறு எவராலும்
என்னைக் காதலிக்க முடியாது.........

செவ்வாய், 31 ஜூலை, 2012

கவிதைப் புன்னகை

உன் அழகை வர்ணித்து
நான் எழுதிய கவிதைகளை எல்லாம்
உன்னிடம் காண்பித்தேன்....
படித்துவிட்டு வெட்கத்தில்
இதழோரம் புன்முறுவல் செய்தாய்...
தோற்றுப் போனது
என் அத்தனை கவிதைகளும்
உன் புன்னகையில்.................

வெள்ளி, 27 ஜூலை, 2012

முத்தம்

நீ வெட்கம்கொண்டு,
உன் முகத்தை மறைக்கும்
விரல்கள் என்னும் திரைகளை
தொட்டு தொட்டு திறக்கும் திறவுகோல்
என் உதடுகள்..........

வெள்ளி, 20 ஜூலை, 2012

கொலுசுகள்

உன் சிரிப்பொலியை
எப்போடியோ பதிவுசெய்து வைத்துகொண்டு
அதை அப்படியே ஒலிபரப்பு செய்கின்றன
உன் பாதக்கொலுசுகள்...............

திங்கள், 16 ஜூலை, 2012

வண்ணத்துப்பூச்சி:

உன் இதழ்களை, 
மலர் என்று நினைத்து
மதுவருந்த வந்த பூச்சிகள் எல்லாம்
மது இல்லாமல் ஏமாற்றமடைந்து
உன் இதழ்களின் சாயத்தில் நனைந்து
உருமாறிச் செல்கின்றன.....
வண்ணத்துப்பூச்சிகளாய் !!!

வெள்ளி, 15 ஜூன், 2012

கற்றுக்கொள்

அவள் கண்களைப் பார்த்து
பேசும் ஒவ்வொரு ஆணும்
கண்டிப்பாக கற்றுக் கொள்வான்
கவிதை எழுத.....................

சனி, 26 மே, 2012

எப்படி உரைப்பேன்

உன் கண்களைப் பார்த்தாலே
வெட்கப்பட்டு திரும்பிக்கொள்ளும்
என் கண்களை வைத்து எப்படி உரைப்பேன்
உன்னிடம் என் காதலை.............

உன் வெட்கம்

உன் விழிகள் பேசும் வார்த்தைகளுக்கு
அர்த்தம் புரியாமல் தவித்த எனக்கு
இதற்கு பெயர் தான் காதல் என்று
உணரவைத்தது உன் வெட்கம்..............

மொழி பெயர்ப்பு

உன் விழிகள் பேசும் வார்த்தைகளை
மொழிபெயர்க்கும் ஒரே மொழி
என் கவிதைகள்.......

வெள்ளி, 25 மே, 2012

அறிவுரை

காதலிக்க வேண்டாம் என்று
அறிவுரை சொல்லிக்கொண்டு திரிந்த என்னை
காதலிக்க சொல்லி அறிவுரை செய்தது
அவளின் அழகு..................

காதலுக்கு மரியாதை

அவளை காதலிப்பதன் மூலம்
காதலுக்கு மரியாதை செய்கிறது
என் இதயம்..............

நட்சத்திரங்கள்

உன் அழகை வர்ணிக்க வார்த்தைகளைத் தேடி
வார்த்தைகள் கிடைக்காமல் - நான்
அடைந்த தோல்விகளை எல்லாம்
வானத்தில் குறித்துவைத்தேன்
நட்சத்திரங்களாய்............

பேசும் வார்த்தைகள்

என் காதலை மேலும் மேலும்
அழகாய் மாற்றுகின்றன - அவள்
தினம் தினம் என்னுடன்
பேசும் வார்த்தைகள்.................

இதழ் பரிசு

என் கவிதைக்கு
பரிசளிக்க நினைத்த அவள் - என்
விரல்களில் இதழ் பதித்தாள்...
பிறகுதான் நினைத்தேன்
பாடியிருக்கலாம் என்று..............

இதய தாஜ்மஹால்

பிரிந்து சென்ற காதலியை
நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும்
ஒவ்வொரு ஆணின் இதயமும்
ஒரு தாஜ்மஹால் தான்.............

குயில் பாட்டு

குயிலின் பாட்டு அழகுதான் எனக்கு
அவளின் குரலை கேட்காதவரை......

வெள்ளி, 18 மே, 2012

வெட்கம்

உன்னிடம் காதலை சொல்ல வந்தேன்.....
உன் வெட்கத்தைப் பார்த்து
வெளிவரவில்லை என் காதல்
வெட்கப்பட்டு..................

பொய்

காதல் அழிவதில்லையாம்....
அது பொய்
அழிந்துவிட்டது என் தாய் மீதான காதல்
உன்னை பார்த்தவுடன்.................

நண்பன்

நண்பகல் சூரியனும் எனக்கு நண்பன் தான்
நீ என்னுடன் இருக்கையில்.....

அற்ப சுகம்

நீ என் கன்னத்தில் முத்தமிடும்போது
உன் மூச்சுக்காற்று வந்து தீண்டும்
அந்த அற்ப சுகத்திற்காக ஏங்குதடி
என் காது மடல்................

வியாழன், 17 மே, 2012

மச்சம்

அவளை படைத்தவுடன் அழகிலே மயங்கிய பிரம்மன்
பூமியில் யார்கண்ணும் பட்டுவிடகூடாது என்று
திருஷ்டிக்காக கன்னத்தில் மை வைத்து அனுப்பிவிட்டான்
மச்சமாக................

பெயர் ஒன்றே போதுமடி எனக்கு

உலகில் உள்ள கவிஞர்கள் அனைவரும்
என்னிடம் போட்டிக்கு வந்தாலும்
நான் அஞ்சமாட்டேன்....
உன் பெயர் ஒன்றே போதுமடி எனக்கு
அவர்களை நான் வெல்வதற்கு..............

தேவதை

தொலைந்துபோன
ஒரு தேவதையை கண்டுபிடிக்க
கடவுள் என்னை
பூமிக்கு அனுப்பினான்
நான்
என் தேடலை முடித்துக்கொண்டேன்
உன்னை பார்த்தவுடன்...!!!

ஓரவஞ்சனைக்காரன்

பிரம்மனின் மகள் நீ !
அதனால்தான் அதிகமாக அக்கறைக்காட்டி
இத்தனை பேரழகாய் படைத்துவிட்டான்
அந்த ஓரவஞ்சனைக்காரன்........................

நிலவில் நீர்

வியர்வையில் நனைந்த
உன் நெற்றிப்பொட்டை கண்டால்
நிலவில் நீரா என்று
வியந்து போவார்கள் விஞ்ஞானிகள்................

வானவில்

உன் உதட்டு சாயத்தை தொட்டு
வானத்தில் பூசினேன் -
வானம் வெட்கப்பட்டு மாறியது
வானவில்லாக..............

கவிதை தெரியாது எனக்கு

கவிதை எழுத தெரியாது எனக்கு
உன் வெட்கத்தை
மொழிபெயர்ப்பு செய்வதைத் தவிர - வேறு
கவிதை எழுத தெரியாது எனக்கு..................

இசைஞானி

நீ சிணுங்கும் போது தோன்றும்
ஒலியை பதிவுசெய்து உலகுக்கு தெரிவித்தேன்...
பட்டம் கொடுத்துவிட்டார்கள் எனக்கு
இசைஞானி என்று....................

குடியேற்றம்

என் இதயத்தில் உள்ள அவளின் நினைவுகள்
அனைத்தையும் காலி செய்தேன்
அழகிய கவிதை தொகுப்புகளாய் சென்று
குடியேறுகின்றன அவை அனைத்தும்
காகிதத்தில்............

தீண்டும் சுகம்

மலர்களை பறித்தால் வலிக்குமாம் அதற்கு.....
ஆனால் எத்தனை பேருக்கு தெரியும்?
மலர்கள் மலர்வதே
உன் விரல்கள் தீண்டும் அந்த சுகத்துக்குதான் என்று...........

கள்ளத்தனம்

உன்னை பார்த்தவுடன் எனக்கு தோன்றும்
என் களங்கமில்லா சிரிப்புக்கு பின்னால்
கள்ளத்தனமாய் ஒளிந்துருக்கிறது
என் காதல்....................

வைரமடி நீ எனக்கு

சுரங்கம் தோண்டி
வைரங்களை தேடுகிறார்கள் வீணாக !
நீ நடக்கும் போது உன் பாதங்களை தீண்டும்
மணல் துகள்களை விட்டுவிட்டு................

தனிமையில் அவள்

நான்கு அறைகள் கொண்ட
இருள் சூழ்ந்த வீட்டில்
தனிமையில் வாழ்கிறாள் அவள்...
என் இதயத்தில்.....

குயில் கூட்டத்து தலைவி

சத்தம் போட்டு பேசாதடி என் செல்லமே......
வெளியில் வந்து பார்
குயில்கள் எல்லாம்
உன் வீட்டு கூரையில்
மௌனமாய் நின்று கொண்டு
மனப்பாடம் செய்கின்றன
உன் குரலை............