உன் வீட்டு ஜன்னலில் இருந்து
நீ எனக்கு காற்றில் அனுப்பிய
முத்தங்களை எல்லாம்
தவறாமல் சேர்த்து வந்தேன்....
தவறிய முத்தங்கள் எல்லாம்
வானத்தை அடைந்து
மாறியது வானவில்லாக.................
உன் கார்குழல்
உன் கயல்விழிகள்
உன் மலரிதழ்கள்
உன் மழலைச் சிணுங்கல்கள்
உன் செல்லக் கோபங்கள்
உன் கொலுசின் ஒலிகள்
இவைகளைப் போல்
வேறு எவராலும்
என்னைக் காதலிக்க முடியாது.........
உன் அழகை வர்ணித்து நான் எழுதிய கவிதைகளை எல்லாம் உன்னிடம் காண்பித்தேன்.... படித்துவிட்டு வெட்கத்தில் இதழோரம் புன்முறுவல் செய்தாய்... தோற்றுப் போனது என் அத்தனை கவிதைகளும் உன் புன்னகையில்.................
உன் இதழ்களை,
மலர் என்று நினைத்து
மதுவருந்த வந்த பூச்சிகள் எல்லாம்
மது இல்லாமல் ஏமாற்றமடைந்து
உன் இதழ்களின் சாயத்தில் நனைந்து
உருமாறிச் செல்கின்றன.....
வண்ணத்துப்பூச்சிகளாய் !!!
அவளை படைத்தவுடன் அழகிலே மயங்கிய பிரம்மன்
பூமியில் யார்கண்ணும் பட்டுவிடகூடாது என்று
திருஷ்டிக்காக கன்னத்தில் மை வைத்து அனுப்பிவிட்டான்
மச்சமாக................
உலகில் உள்ள கவிஞர்கள் அனைவரும்
என்னிடம் போட்டிக்கு வந்தாலும்
நான் அஞ்சமாட்டேன்....
உன் பெயர் ஒன்றே போதுமடி எனக்கு
அவர்களை நான் வெல்வதற்கு..............