செவ்வாய், 31 ஜூலை, 2012

கவிதைப் புன்னகை

உன் அழகை வர்ணித்து
நான் எழுதிய கவிதைகளை எல்லாம்
உன்னிடம் காண்பித்தேன்....
படித்துவிட்டு வெட்கத்தில்
இதழோரம் புன்முறுவல் செய்தாய்...
தோற்றுப் போனது
என் அத்தனை கவிதைகளும்
உன் புன்னகையில்.................

வெள்ளி, 27 ஜூலை, 2012

முத்தம்

நீ வெட்கம்கொண்டு,
உன் முகத்தை மறைக்கும்
விரல்கள் என்னும் திரைகளை
தொட்டு தொட்டு திறக்கும் திறவுகோல்
என் உதடுகள்..........

வெள்ளி, 20 ஜூலை, 2012

கொலுசுகள்

உன் சிரிப்பொலியை
எப்போடியோ பதிவுசெய்து வைத்துகொண்டு
அதை அப்படியே ஒலிபரப்பு செய்கின்றன
உன் பாதக்கொலுசுகள்...............

திங்கள், 16 ஜூலை, 2012

வண்ணத்துப்பூச்சி:

உன் இதழ்களை, 
மலர் என்று நினைத்து
மதுவருந்த வந்த பூச்சிகள் எல்லாம்
மது இல்லாமல் ஏமாற்றமடைந்து
உன் இதழ்களின் சாயத்தில் நனைந்து
உருமாறிச் செல்கின்றன.....
வண்ணத்துப்பூச்சிகளாய் !!!