செவ்வாய், 24 டிசம்பர், 2013

Tamil Kadhal Kavithaigal - பிறந்தநாள்

பிரம்மனின்
கற்பனைகள் முழுவதையும்
கொள்ளையடித்த கன்னியே!
உன் பிறந்தநாள் - அவன்
கற்பனைகள் தொலைந்த நாள்..!!!

வெள்ளி, 20 டிசம்பர், 2013

Tamil Kadhal Kavithaigal - பிரம்மனின் கடமை

உன்னைத் தவிர 
மற்றப் பெண்களைக் 
காணும் பொழுதெல்லாம்  
பிரம்மன் கடமைக்கு 
செய்திருப்பதை உணர்கிறேன்.....
என் தேவதையே 
உன்னைக் காணும்பொழுது மட்டும்தான் 
பிரம்மன் செய்த 
கடமையை எண்ணி 
வியந்து  நிற்கின்றேன்!!!!! 

புதன், 4 டிசம்பர், 2013

Tamil Kadhal Kavithaigal | கவிஞனையும் வென்றுவிடும்

உன்
கார்குழல்
கனியிதழ்
கயல்விழி
மழலைச் சிணுங்கல் 
கிளிக் கொஞ்சல்
குயில் குரல்
செல்லக்கோபம்
அனிச்சை நாணம்
மெல்லிடை
அன்ன நடை
மயில் நாட்டியம்
கொலுசின் ஒலி
பாதத் தடங்கள்
இவைகளை வரையறுத்து
உன் பெயரை தலைப்பாக வைத்து
நான் எழுதிய வாக்கியங்கள்
உலகின் தலைசிறந்த
கவிஞனையும் வென்றுவிடும்......

புதன், 16 அக்டோபர், 2013

Vanavil Azhagu - வானவில் விழியழகு

உன் மை தீட்டிய 
விழியழகை ரசித்த பின்னால் 
பல வண்ணம் காட்டுகிற 
வானவில்லும் எனக்கு 
வெறும் கறுப்புக்கோடு தான்!

திங்கள், 8 ஜூலை, 2013

புலமைப் பெற்றுவிட்டேன்

எந்த பள்ளியிலும் பயிலவில்லை 
எந்த கல்லூரியிலும் கற்கவில்லை 
எந்த புலவரிடமும் கற்றுத் தர சொல்லி நிற்கவில்லை 
ஆனாலும் புலமைப் பெற்றுவிட்டேன் 
உன் 
விழியசைவு, வெட்கம், மழலைச்சினுங்கல் 
இவைகளை ரசித்த பிறகு..........