வியாழன், 17 மே, 2012

வைரமடி நீ எனக்கு

சுரங்கம் தோண்டி
வைரங்களை தேடுகிறார்கள் வீணாக !
நீ நடக்கும் போது உன் பாதங்களை தீண்டும்
மணல் துகள்களை விட்டுவிட்டு................

தனிமையில் அவள்

நான்கு அறைகள் கொண்ட
இருள் சூழ்ந்த வீட்டில்
தனிமையில் வாழ்கிறாள் அவள்...
என் இதயத்தில்.....

குயில் கூட்டத்து தலைவி

சத்தம் போட்டு பேசாதடி என் செல்லமே......
வெளியில் வந்து பார்
குயில்கள் எல்லாம்
உன் வீட்டு கூரையில்
மௌனமாய் நின்று கொண்டு
மனப்பாடம் செய்கின்றன
உன் குரலை............