என் தேவதையே!
உன் கார்குழலை
கார்முகிலோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு கருமை இல்லை!
உன் கருவிழியை
கயல்விழியோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு விழி ஈர்ப்பு இல்லை!
உன் சிரிப்பை
மலர்களோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு புன்னகை இல்லை!
உன் செல்லக்குரலை
குயிலின் பாட்டோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு இனிமை இல்லை!
உன் மழலை பேச்சை
கிளியின் பேச்சோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு சிணுங்கல் இல்லை!
உன் முகத்தை
வான்மதியோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அதற்கு ஒளி இல்லை!
உன் கிறுக்கல்களை
வைரமுத்து வரிகளோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு உயிர் இல்லை!
உன் நடையை
தோகைமயிலோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அவற்றுக்கு நளினம் இல்லை!
உன் பாதச் சுவடுகளை
மோனலிசா ஓவியத்தோடு ஒப்பிட்டு பார்த்தேன்
உன் போல் அது அழகு இல்லை!
உன்னை ஒப்பிட முடியாமல்
என் தோல்வியை ஒப்புக்கொண்டு
நீ ஒப்பற்ற பேரழகி என்று
ஒத்துக் கொண்டேன்............
Tamil Kadhal Kavithaigal , Tamil Love Lyrics , Love Lyrics , Kathal Kavithaikal , தமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்
வியாழன், 29 நவம்பர், 2012
திருடிய கவிதை
என் இதயம் என்னும் ஏட்டில்
தோன்றிய கவிதைகள் எல்லாம்
உன் நினைவுகள் என்னும்
புத்தகத்தில் இருந்து
திருடப்பட்டவை...............
தோன்றிய கவிதைகள் எல்லாம்
உன் நினைவுகள் என்னும்
புத்தகத்தில் இருந்து
திருடப்பட்டவை...............
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)